நார்வே செஸ் சாம்பியன்ஷிப்-ன் 8வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார்.
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் எட்டாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார். கடுமையான சவாலாக இருந்த இந்தப்போட்டியின் 50-வது நகர்த்துதலின் போது ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்திற்க்கு எந்த புள்ளியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இதுவரை 8 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.