
மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கள் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்