 |
|
கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு கன்டெய்னரில் ஏற்றப்படுகின்றன. இவை வழக்கமாகச் செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பபப்படவுள்ளன.
இரண்டு நாட்களில் இந்தப்பணிகள் முடிந்து நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்குக் கப்பல் இலங்கைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற்ற நிலவரங்கள் குறித்து கப்பல் கேப்டன் முகமது முஸ்தபா கூறும்போது இலங்கைக்கு சென்றபோது ராணுவத்தினர் தங்களை ஐந்து நாட்கள் சிறைவைத்ததாகவும் சோதனைகள் நடத்தி ஆயுதங்கள் இல்லை என்று உறுதிசெய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர் என்றார்.
இது சர்வதேச விதிகளுக்கு மாறானது, பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாகச் சொன்னாலும் மீண்டும் இலங்கை செல்ல விரும்பமில்லை என்று தெரிவித்தார். |
 |
|
நாவல்காடு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் சுற்றுலாப்பயணமாக வட்டப்பாறை வந்தனர். அனைவரும் மது அருந்திவிட்டு குளித்தனர். இதில் இரணியலைச் சேர்ந்த அய்யப்பன் என்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். தீயணைக்கும் படையினர் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
|
 |
|
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் உறவு பாதிக்கக்கூடாது என்பதற்காக கருணாநிதி கடைபிடித்த அணுகுமுறையால் இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கொள்கையை கைவிடுவதற்கும் துணிச்சல் வேண்டும் என்கிறார். பிரிவினை கேட்கும் கட்சிகள் தடைசெய்யப்படும் என்று சட்டம் கொண்டுவரப்படவில்லை. பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் நிற்க முடியாது என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டது. தேர்தலில் நின்று பதவி சுகம் அனுபவிக்க இந்த சட்டம் தடையாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் திராவிட நாடு கொள்கையை குழிதோண்டி புதைத்தனர் என்று நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். |
 |
|
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு வழக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு மத்திய அமைச்சர் ஒருவர் தம்மை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.ரகுபதி நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
முன்ஜாமீன் வழக்கில் சம்பந்தப்பட்ட சிலருக்கும், தி.மு.கவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய அந்த அமைச்சரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்.
மத்திய அமைச்சரின் இதுபோன்ற செயலை பிரதமர் மன்மோகன்சிங் கண்டும் காணாமல் இருந்தால் அது இந்த நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் செய்யும் தீங்காக அமையும் என்று தெரிவித்துள்ளார். |
 |
|
இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்கு ஆதரவாகவும், எளிமையானதாக இருக்குமென்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் ரயில்வே பட்ஜெட் குறித்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். |
 |
|
திருப்பத்தூர் அருகேயுள்ள கட்டோரி கிராமத்தில் மண்ணீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு டாக்டர் சின்னமலை தலைமை தாங்கினார். இதில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
|
 |
|
விழாவில் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
 |
|
சென்னை மெமோரியல் ஹாலின் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். குட்வில் மாநிலத் தலைவர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு கன்டெய்னரில் ஏற்றப்படுகின்றன. இவை வழக்கமாகச் செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பபப்படவுள்ளன.
இரண்டு நாட்களில் இந்தப்பணிகள் முடிந்து நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்குக் கப்பல் இலங்கைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற்ற நிலவரங்கள் குறித்து கப்பல் கேப்டன் முகமது முஸ்தபா கூறும்போது இலங்கைக்கு சென்றபோது ராணுவத்தினர் தங்களை ஐந்து நாட்கள் சிறைவைத்ததாகவும் சோதனைகள் நடத்தி ஆயுதங்கள் இல்லை என்று உறுதிசெய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர் என்றார்.
இது சர்வதேச விதிகளுக்கு மாறானது, பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாகச் சொன்னாலும் மீண்டும் இலங்கை செல்ல விரும்பமில்லை என்று தெரிவித்தார். |
 |
|
சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்தார். பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூறப்பா ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படும் என்றார். காவேரி நதி நீர் பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். |
 |
|
இன்று பிற்பகல் திடீரென குடிசையில் பற்றிய தீ பரவியதில் அடுத்தடுத்திருந்த 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஒரு மூதாட்டி மற்றும் ஆடு மாடுகள், பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சம்ப இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சீதாராமன் வருகைதந்து ஆறுதல் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார், நகர அமைப்பாளர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன் ஆகியோர் உடனிருந்தனர். |
 |
|
சென்னை துறைமுக தலைவராக கேப்டன் சுபாஸ் குமார் இன்று பொறுப்பேற்றார். வணங்காமண் கப்பல் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
|
 |
|
கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ரமண சரஸ்வதி, ஆர்.டி.ஓ. சண்முகநாதன், பஞ்சாயத்து துணை தலைவர் ராமையா, பராசக்தி கல்லூரி முதல்வர் சசிகலா, பேராசிரியை கயற்கன்னி, கவுன்சிலர் குமார் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகளை தடைசெய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியிலும் நீர் வரத்து அதிகரித்திருந்தது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்தது. |
 |
|
இலங்கையில் போரின் போது விடுதலைப்புலிகளின் இணையதளம் மற்றும் வானொலி ஒளிபரப்பு மையம் தகர்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி கரும்புலிகள் தினத்தையொட்டி மீண்டும் இணையதளம் மற்றும் வானொலி ஒளிபரப்பு துவங்கும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
இதே நாளில் உலகின் பல்வேறு நாடுகளில் அங்குள்ள தமிழர்கள் உயிர்த்தெழுவோம் என்ற பெயரில் பேரணி மற்றும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
|
 |
|
ஓரிகையில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இதன் மேலாளர் குருமூர்த்தி. இவர் வாலஜாபாத் சூப்பர்வைசர் வெங்கடேசிடம் ரூபாய் 25 ஆயிரம் தராவிட்டால் இடமாறுதல் செய்வதாக எச்சரித்திருக்கிறார். இதனையடுத்து வெங்கடேஷ் தந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் குருமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
|
 |
|
இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அரங்கில் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
|
 |
|
சென்னை அருகே உள்ள பொன்னேரியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த மினி வேனை மடக்கி சோதனை மேற்கொண்டதில் போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஓட்டுனரை கைது செய்து விசாரனை நடத்தினர். மேலும் விசாரனையில் செங்குன்றத்தில் போலி மதுபான தொழிற்சாலைகள் இருப்பது தெரியவந்தது. அந்த தொழிற்சாலையை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலிஸார் முற்றுகையிட்டு தொழிற்சாலையில் இருந்தவர்களை கைது செய்தனர்.
|
 |
|
சென்னை சேப்பாக்கம் சமூக நல அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
கடந்த 27ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை அரசு பணியாளர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கருப்பு சேலை அணிந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆணையர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலிஸார் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்களை கைது செய்தனர்.
வேலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் ரத்னமாலா தலைமையில் 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். |
 |
|
சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசிய அமைச்சர் கீதாஜீவன் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள அரவாணிகளுக்கு வீடு கட்ட ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் ஊனமுற்றோரை திருமணம் செய்து கொண்டால் அரசு ரூபாய் 20 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இனி ஊனமுற்றவரை யார் மணந்தாலும் ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். |
 |
|
நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை குறித்து பா.ம.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே இரு கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே பா.ம.க. கோ.க. மணி பேசும்போது...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவபுண்ணியம் பேசும்போது...
பின்னர் மீண்டும் அவையில் அ.தி.மு.க உள்ளி;ட்ட அனைத்துக் கட்சியினரும் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளித்து பேசும்போது நெய்வேலி பிரச்சினையில் மாநில அரசு தலையிட முடியாது, இருப்பினும் நெய்வேலியி;ல் தயாராகும் 2400 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1124 மெகாவாட் கிடைப்பதால் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று தெரிவித்தார். |
 |
|
சட்டசபை துவங்கியதும், அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன், உயர்நீதி மன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் பெயரை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், பா.ம.க கோ.க.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சிவ புண்ணியம், மார்க்ஸிஸ்ட் கட்சி பாலபாரதி, ஆகியோர் பேசினர்.
அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசிய போது நீதிபதி தன்னை மிரட்டிய மத்திய அமைச்சர் பெயரை வெளியிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பெயரை அமைச்சர் வெளியிட மறுத்ததை கண்டித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அவைக்கு வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். |
|