|
|
|
|
|
|
|
|
|
கனடாவிற்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கலாம் என்று தமிழ் காங்கிரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கையிலிருந்து கனடா நாட்டை நோக்கி கப்பலில் சென்ற தமிழ் அகதிகளை கனடிய பாதுகாப்புப் படை வீரர்கள் சிறைபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, கப்பலில் இருந்த தமிழ் அகதிகளின் நிலைமை கண்டு அவர்களுக்கு அகதிகள் அங்கீகாரம் வழங்கி கனடாவில் தங்க இடம் கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதனிடையே, கப்பலில் வந்திருக்கும் அகதிகளில் பலருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருப்பதாக கூறி அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று இலங்கை சார்பில் கனடிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனையும் மீறி, தீவிர விசாரணைக்குப் பின் தகுந்த ஆதாரங்கள் வைத்திருக்கும் தமிழ் அகதிகளுக்கு கனடிய அரசு, அகதிகள் அங்கீகாரம் வழங்கிவருகிறது. இந்நிலையில், கனடிய அரசின் அமைச்சரான ஜாக்சன் கென்னி, அகதிகளாக வந்திருக்கும் தமிழர்களில் பலருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களிடம் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்த அந்நாட்டு தமிழ் காங்கிரஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் டேவிட் பூபால பிள்ளை, அகதிகளாக வந்திருப்பவர்களுக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருப்பதை கனடிய அரசு தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தால் அவர்களை அந்நாட்டு அரசின் விதிகளின் படி தண்டித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாள் பயணமாக தென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள அவர், இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார். இரு நாடுகளின் ராணுவத் தளவாடங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கீழை நாடுகளை நோக்கி என்ற கொள்கையின் கீழ் இந்த சந்திப்பு நடைபெறுவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியா ரத்து செய்துள்ள நிலையில், அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் தென்கொரிய பயணம், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவுடன் இணைந்து மீண்டும் ராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் பகுதியில் ராமநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. ராமநதியில் சுமார் 147.50 மில்லியன் கனஅடி நீர் உபரியாக உள்ளது. ஆனால், ஜம்பு நதியில் கிடைக்கும் நீர் அதன் முதல் அணைக்கட்டான குத்தாலப்பேரி அணைக்கட்டுக்கு மட்டுமே போது மானதாக உள்ளது. எனவே, ராமநதி நீர்த்தேக்கத்தின் உபரி நீரை ஜம்பு நதியின் இரண்டாவது அணைக்கட்டான நாரணப்பேரி அணைக்கட்டுக்கு புதிய கால்வாய் மூலம் கொண்டு செல்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்களாலும், ம.தி.மு.க.வாலும் வலியுறுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து வந்த தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி ராமநதி மேல்மட்டக் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வடசென்னை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு நோய் கணக்கின்படி, இந்த 3 ஆண்டுகளில் காலரா மற்றும் வயிற்று போக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையின் சீரிய பணியின் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 1600-க்கும் மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், மாநகராட்சி சுகாதாரத்துறை சிறந்த புகலிடமான தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் கூட உயிர் இழப்பின்றி காப்பாற்றப்பட்டனர் என்பது தேசிய அளவில் பாராட்டப்பட்ட முக்கிய நிகழ்வாகும். மாநகராட்சி தண்டை யார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக 250 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன வகையில் ரூபாய்.21 கோடி செலவில் கட்டு மானப்பணிகள் நடைபெற்று வரும் டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடும் நிலையில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, சர்க்கரை நோய்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நவீன மைக்ராஸ்கோப் கருவிகள் வாங்கப்பட்டு மலேரியா நோய் கண்டறியப்பட்டு, இலவசமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மூத்த குடிமகன்கள் பயன்பெற வட சென்னையிலும், தென் சென்னையிலும் இரண்டு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போன்று, பொதுமக்களின் நலன்களுக்காக இரண்டு பல் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆறு நவீன ரத்த பரிசோதனை நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக தொடங்கப்பட்டு மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் இ.சி.ஜி போன்றவைகளும் மிகக்குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகிறது. பொது மக்களின் மேலும் பயன் பெறுவதற்காக வீடுதோறும் ரத்த பரிசோதனை திட்டமும் நடைபெற்று வருகிறது. 140 வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3.50 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பயன் பெறும் வகையில் வருடம் இரண்டு முறை பூச்சி கொல்லி மருந்துகள் 5 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் 45 மருத்துவர்கள், 80 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டையிலும், பெருமாள் பேட்டையிலும் இயங்கி வந்தது விரிவாக்கப்பட்டு 9 மண்டலங்களில் செயல்படும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 93 ஆரம்ப சுகாதார மையங் களிலும் ஸ்கேன் வசதி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. போதுமான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்யப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இத்தனை மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் இந்த வேளையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10 ஆண்டு காலமாக தமிழக முதல்வராக இருந்தபோது, ஒரு முறை கூட தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்து வமனையினை வந்து பார்த்த தில்லை. தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என்று எண்ணி வராமல் இருக்கலாம். ஆனால் மக்கள் பணி ஆற்றிடும் தலைவர் கலைஞர் உத்திரவுப்படி நவீன தொற்றுநோய் மருத்துவமனை கட்டிவரும் சென்னை மாநகராட்சியை குறித்து விமர்சனம் செய்வது மிகவும் கண்டனத் திற்குரியதாகும். தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவ மனையை பார்வையிட்டு ஆய்வு செய்ததில், காலரா இல்லை என்பது நிருபனம் ஆகியது. கொடநாட்டில் இருந்து கொண்டு யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையில் கையொப்பம் இட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேண்டுமானால் தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். பீதியை கிளப்பி விட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். உண்மை நிலையை பொதுமக்கள் அறிவதற்காக, இந்த அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சுமார் 2200 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை சிங்களர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறியுள்ளார். இத்தகைய ஆக்கிரமிப்பால் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கும், மாவட்ட அரசு அதிகாரிக்கும் பா. அரியநேத்திரன் கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பில் உள்ள 2200 ஏக்கருக்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை என அழைக்கப்படும் மண்முனை தென் மேற்கு பகுதி செயலாளர் பிரிவு மற்றும் மண்முனை மேற்கு பகுதி செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட காத்தாடியார் சேனை (575 ஏக்கர்) தாளையடி மடு (585 ஏக்கர்) கெவிலியாமடு (583 ஏக்கர்) பெருவட்டை (500 ஏக்கர்) ஆகிய பிரதேசங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக பிரகடனம் செய்து நில அளவைப் படத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படுவான்கரை, மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதி. இங்குள்ள நிலப்பரப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி விவசாய நிலங்களாகும். இவற்றில் நெல் சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் முக்கியமாக இருக்கின்றனர். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு பால் உற்பத்தியும் இடம்பெறுகின்றது. இந்த நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் ராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதால் விவசாயிகள் குறிப்பாக கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்களின் கால்நடைகளை அவர்கள் எங்கு கொண்டு செல்வது? எப்படி அவைகளைப் பராமரிப்பது? நகர்ப்புறங்களிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் பெருந்தொகையான கால்நடைகளை வளர்க்கலாமா? இந்த கால்நடைகளுக்கு யார் உணவு கொடுப்பது? என அவர் கேள்வி எழுப்புவதுடன். இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றையும் தான் இன்று அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
விமான நிலையத்தில் ரூ. 1 கோடி பெறுமானமுள்ள தங்கக் காசுகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில பயணம் செய்தவர்களின் உடைமைகள் வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்த ஒருவரின் மீது அதிகாரிகளின் சந்தேகப் பார்வை பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது சரியான பதில் அளிக்கமுடியாமல் தினறினார். அவரின் இந்த செயலால் அதிகாரிகளின் சந்தேகம் ஊர்ஜிதமானது. அவர் அணிந்திருந்த மேல் அங்கி வழக்கத்திற்கு மாறாக பூடைத்திருந்தது. அதனை சோதனை செய்தபோது அதில் 8 கிராம், 10 கிராம் எடையுள்ள 500 தங்கக் காசுகள் இருந்தது. அந்த காசுகளின் மதிப்பு ரூ. 1 கோடி. காசுகளைத் தந்திரமாகக் கடத்தி வந்தவரின் பெயர் செய்யது பாரூக் ( 44). அவர் காரைக்காலைச் சேர்ந்தவர். பாரீஸ் குடியுரிமை பெற்றிருக்கிறார். அவர் துபாயில் இருந்து புறப்படவில்லை. பாரீசில் இருந்து கிளம்பி துபாய் வழியாகச் சென்னை வந்துள்ளார். அவரிடம் இருந்த தங்கக் காசுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தங்கத்தை கடத்தி வந்தவர் அதை யாருக்காக செய்தார் என்பதை கண்டறிய விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
காவல் நிலையத்தில் கைதி தற்கொலை செய்தது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சக்தி விளாகத்தைச் சேர்ந்தவர் தங்க ராஜ். இவரைக் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அப்போது சப்- இன்ஸ்பெக்டராக இருந்த சிவஞானம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார். தங்க ராஜ் காவல் நிலையத்தில் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் இறப்பில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. போலீஸ் அராஜகத்தை எதிர்த்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தங்கராஜ் அப்பாவி என்றும், சப்- இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே அவரை அழைத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரை விடுவிக்க ரூ. 15,000 பணம் கேட்டு அதில் ரூ. 5,000 வாங்கியதும் வெளிச்சத்திற்கு வந்தது. தங்க ராஜை காவல் நிலையத்தில் வைத்து சப்- இன்ஸ்பெக்டரும், காவலர்கள் பொன்னம்பலம், சிவகொழுந்து ஆகியோரும் அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் தான் அவர் விஷம் குடித்துள்ளார். இந்த அறிக்கையின் பேரில் கடலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சண்முக நாதன் அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
|
பெரம்பூரில் உள்ள ஜெ.டி. குழுமத்தின்
5-ம் ஆண்டு தொடக்க விழா பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்தது. விழாவில் ஏழை
களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஜெ.டி. குழுமத்தின் தலைவர் வி.எஸ்.ஜெ. தினகரன்
தலைமை தாங்கினார். வி.எஸ்.ஜெ. கிரிதரன் முன்னிலை வகித்தார். விழாவில்
சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து
கொண்டு ஏழை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 2 ஆயிரம் பேருக்கு சேலைகள், 15 பேருக்கு தையல்
எந்திரம், 15 பேருக்கு அரவை எந்திரம், 15 பேருக்கு 3 சக்கர வண்டி, 100
பெண்களுக்கு ரூ.1,500 வீதம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில் சோழன் நம்பியார், இரா. செல்வம்,
வக்கீல்கள் கபிலன், சங்கர், ரவி மற்றும் ஜாகீர்கான், சங்கர் கணேசன், குரு,
மனேஷ்குமார், சுரேஷ், டி. ராஜா, குருநாதன், எஸ். பாபு, சீனி, ராஜ்கிரண்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்ட மின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன, பற்கள் உறுதிப்படுகின்றன, உடல் வெப்பத்தைத் தணிக்கிறது, அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன, வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் உறையில் அடைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது. இயற்கையான சத்து மிகுந்த இந்த பதநீரைப் பல நாட்களுக்கு, ஏறத்தாழ 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள டெட்ராபேக் முறையை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிமுகம் செய்தார். மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி செய்து நவீனமுறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனை வெல்லம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று அறிமுகப்படுத்தினார். பதநீரும் பிற பொருள்களும் இம்முறையில் விற்பனை செய்யப்படுவதன்மூலம் தமிழகம் முழுவதிலும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுக்கும். இப்புதிய திட்டம் பதநீர்ப்பருவம் தொடங்கும் வரும் நவம்பர் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும். இந்நிகழ்ச்சியின்போது, அமைச்சர் ராமச்சந்திரன், கைத்தறி கைத்திறன் துணி நூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ராஜ கோபால், மற்றும் பனைப் பொருள் வளர்ச்சி வாரிய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு இன்று செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததைக் குறிப்பிட்டார். மேலும், அதற்காக தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவரது சொந்த ஊரில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகக் கூறினார்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
மேட்டுபாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊட்டி மலைஇரயில் எந்திர கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஊட்டி மலை இரயில் 30 இடங்களில் நின்று சென்றது. இந்நிலையில் குன்னுர் அருகே வந்த போது உந்துசக்தி குறைந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மலைஇயிரை சரி செய்ய தெற்கு இரயில்வே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்தனர். மலை இரயில் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக மலை இரயில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பழுதாகி நிற்பதால் மலை இரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
வட ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத்தால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சியே மழைக்கு காரணம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சோழவந்தானில் 5 செ.மீட்டர் மழையும், நடுவட்டத்தில் 4 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
இங்கிலாந்து பத்திரிக்கையான நியூஸ் ஆப் தி வேர்ல்ட் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனின்போது அந்த பத்திரிகை கொடுத்து அனுப்பிய குறியிடப்பட்ட பணம் சல்மான் பட்டிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் டெய்லி மெயில் இதை வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் உங்களிடம் எப்படி வந்தது என்பது குறித்து தற்போது சல்மான் பட்டிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரிக்கவுள்ளனர். மேலும், இந்தப் பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவற்றை தடயவியல் சோதனைக்காக அனுப்பியுள்ளனர். ஸ்டிங் ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட பணம் சல்மான் பட்டிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட், முகம்மது ஆமிர், முகம்மது ஆசிப் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கேப்டன் சல்மான் பட், முகம்மது ஆசிப் மற்றும் ஆமிர் ஆகியோர் தற்காலிகமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிமுறையின் கீழ் இவர்களுக்கு இந்த சஸ்பெண்ட் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் தவறு என்று நிரூபிக்கப்பட்டால்தான் இவர்களால் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வீரர்களுக்கும் சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கும், விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்டப் புகார் காரணமாக ஐசிசியால் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள முதல் வீரர்கள் இந்த மூன்று பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தடையை எதிர்த்து மூன்று பேரும் அப்பீல் செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்பதையும் இவர்கள் நிரூபித்து நிவாரணம் பெற முடியும். மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த அறிக்கை கைக்குக் கிடைத்த 14 நாட்களுக்குள் இவர்கள் அப்பீல் செய்யலாம். இதற்கிடையே மூன்று வீரர்களும் இன்று ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் முன்பு விசாரணைக்காக ஆஜராகவுள்ளனர். இதேசமயம், மூன்று வீரர்களையும் இங்கிலாந்து தொடரிலிருந்து திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை மூன்று பேரும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற மாட்டார்கள் எனவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
கருத்துரை:
கருத்துரைகள் மொத்தம் :143. பக்கம்1 / 15. skd.moorthy மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர் | 3:23 pm , 03-09-2010 | pleace lode fresh news |
MAHIR ALI ameenmahir@yahoo.com | 1:08 am , 25-08-2010 | i like all tamilan news and all tv programmes,
jeddah
SAUDI ARABIA |
MAHIR ALI ameenmahir@yahoo.com | 1:06 am , 25-08-2010 | i like all tamilan news and all tv programmes, |
ganesh ganesh.mn1983yahool.com | 9:38 am , 21-08-2010 | all news |
ajeez mpm ajeez | 5:15 pm , 19-08-2010 | prekerm v |
ajeez mpm ajeez | 5:15 pm , 19-08-2010 | prekerm v |
ajeez mpm ajeez | 5:15 pm , 19-08-2010 | prekerm v |
kumar 8074 | 8:04 pm , 18-08-2010 | rut mari nee |
soupaa64@gmail.com மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர் | 8:14 pm , 17-08-2010 | vaalum ambedkar,thambi prabakaranin marupathippu, annan thirumaave neer vaazhga palnooru aandu |
soupaa soupaa64@gmail.com | 8:09 pm , 17-08-2010 | vaalum thirumaave nee vaazhga palnooru aandu |
பக்கம்: -1- 2 3 4 5 6
|
|
|