 |
|
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வேட்பாளர் இன்பசேகரன், பா.ம.க. வேட்பாளர் தமிழ்குமரன், தே.மு.தி.க. வேட்பாளர் காவேரிவர்மன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் உட்பட இதுவரை 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. பென்னாகரம் தொகுதியில் முறைகேடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தடுக்க அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை வீடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
|
 |
|
டபுள்யூ.ஆர். வரதராஜன் பற்றிய செய்தியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். இந்த தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், மேற்கு வங்கத்தில் நடத்தி காட்டி வருகின்ற வன்முறையை, தமிழகத்திலும் அரங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். தவறாக செய்தி ஒளிபரப்பப்பட்டது என்று கருதினால் ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாம். அதைவிடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
 |
|
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது மேலும் இருபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மோசடி மற்றும் மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா மீதான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த கோவை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நித்தியானந்தா மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. |
 |
|
வேலூர் மாவட்டம் வடுகதாங்கல் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அமைச்சர் துரைமுருகன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினார். இதில் சுகாதார பணிகள் இயக்குனர் பிரேம்குமார், ஒன்றியகுழுத்தலைவர் சீத்தாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
|
 |
|
கூட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கைப்பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தத்துவ மைய மாநில செயலாளர் விடுதலை, குடந்தைஅரசன், இரா.கிட்டு, பெரம்பலூர் சித்தர், மன்னர் மன்னன், முருகய்யன், பொன்பாவாணன் உட்பட பலர் கலந்து கொண்டு விண்ணப்பப்படிவம் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
|
 |
|
புத்தூர் உய்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவிலின் திருவிழா கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு பலி கொடுத்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினார்.
|
 |
|
தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் விற்பனையாகும் வண்டி ஒன்றுக்கு தற்காலிக அனுமதி பதிவு பெற்றுத்தர ஆயிரம் ரூபாய் வீதம் ரூபாய் 10 ஆயிரம் கேட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இதனை விஜிலென்ஸ் தலைவர் டி.எஸ்.பி. சண்முகப்பிரியா உத்தரவின்பேரி;ல் போலீசார் மறைந்திருந்து பிடித்தனர். இதில்; போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார்.
|
 |
|
இராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரசிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில், அரன்மணை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஜியாவுதின் தலைமையில் ஜமால், கருணாகரன். அப்துல்அமீது, காலித், சையது இப்ராஹீம், உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பண்ருட்டியில் மாவட்ட தலைவர் சவ்கத்அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இதயதுல்லா, நூருல்அமின், முகமது இக்பால் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் சி.ஐ.டி.யூ.சி. மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சிகளின் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, முத்துச்சாமி, அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 19 பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர். |
 |
|
மதுரை மீனாட்சி பஜாரில் மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேல்குடியினருக்கு மட்டும் மத்திய – மாநில அரசுகள் சலுகைகள் தருகின்றன. அடித்தட்டு மக்களுக்கு எந்த வித சலுகைகளையும் செய்யாமல் புறக்கணித்து வருவதாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்;பாட்டத்தில் முகமதுஅப்பாஸ். துணை தலைவர் ஜவருல்லாகான், பொருளாளர் ஏ.எம்.கான் உட்பட பலர் பங்கேற்றனர். |
 |
|
தலித் கிறிஸ்துவ தமிழக ஆயர்குழுவின் சார்பில், மயிலை பேராயர் சின்னப்பா தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது தலித் கிறிஸ்துவ மக்களை எஸ்.சி, எஸ்.டி. பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் பாண்டிச்சேரி பேராயர் அனந்தராஜன், மதுரை பீட்டர்பெர்னாண்டோ, சேலம் சிங்கராயர், கோவை தாமஸ் அகஸ்டின், வேலூர் பேராயர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|