Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils
மதுரை மாவட்ட திமுக சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட செயலாளர் தளபதி தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஒச்சுபாலு, மிசாபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் முகாமில் பயனடைந்தனர்.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தும், அங்கிருந்து சென்னைநோக்கி வந்த அரசுப்பேருந்தும் நேற்றுக் கடம்பை அருகே மோதி விபத்துக்குள்ளாகின. இதில் விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, பீகார், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 600-ற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் சிறப்புகுழு மாநில தலைவி சீலு, தமிழக துணைச்செயலாளர் சற்குண பாண்டியன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அசோசியேசன் செயலாளர் சான்சிராஜா, கராத்தே சந்துரு, கே.ஈ. பாண்டியன், கருணைக்கரங்கள் செல்வக்குமார், டிராபிக் ராமசாமி, ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன், பத்மஸ்ரீ சைனி வில்சன், டாக்டர் சுரேஸ் கண்ணன், பாலசுப்பிரமணியன், சாரதா சுரேஸ், மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகர், டாக்டர் ஆனந்தி ஆகியோர் பங்கேற்றனர். 12சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிற்சாலை மாசுபாடு குறித்த இரண்டு நாள் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

இந்துஸ்தான் லீவர் லிமிட்டெட் தொழிலாளர்கள், கொடைக்கானல் மக்கள் நடத்திய போராட்டத்தை குறிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை எடுத்துரைக்கும் விதமாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியினை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
டி.எஸ்.பி தேவராஜ் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் காவல்துறை பணிகளுக்காக கனகசுந்தரம், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் பெருமாள்சாமி, பாளையம்பட்டி சாந்தா, பாரத் ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் வேலாயுதம் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளிமாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நாராயணன், மாணிக்கம், சகாயராஜ், குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ராஜாமணி சங்கரலிங்கம் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் அமிர்தம் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன் பேராசிரியர் மகாதேவன், பொறுப்பாளர்கள் சாமிநாதன், பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

பெண்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்ட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
முக்குலத்தோர் சமுதாய கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் லக்குமணன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பின் ஸ்ரீதர் வான்டையார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  அனைத்து மாவட்டங்களிலும் சாதிச் சான்றிதழ் பெறலாம் என்ற முதல்வரின் உத்தரவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
மதுரையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்; தனிமூன் அன்சாரி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சீனி முகமது, அப்பாஸ், நூர்முகமது உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இவர்களை காவல்துறை  அதிகாரிகள் கைது செய்தனர்.

இதேபோன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. 300-ற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  இதில் மாவட்ட பொருளாளர் ரசூல் தலைமையில் பிலால், அலிகான், உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகே மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ரகமத்துல்லா கண்டன உரையாற்றினார். உஸ்மான்கான், நைனார் முகமது, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் புளியங்குடி சுல்தான் உட்பட 300-ற்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு நகரத்தலைவர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மெகராயூதின், அமானுல்லா, ஜாசர் அராபத், நூருள் அமீன், ராமகிருஸ்ணன், முகமது ஆசிக் உட்பட 500-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் இவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். முன்னதாக ஊர்வலம் நடத்தப்பட்டது.

வேலூரில், கஸ்பா பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது முகமது யாசீன் செரீப,; அஸ்லாம் பாஷா தலைமையில் 200-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாசாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் சபீர் அகமது தலைமை தாங்கினார். கலிபுல்லா, நாசர் உசேன், தர்மபுரி சாதிக் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியால் சாமியார் நித்தியானந்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் நேற்று பேட்டி அடங்கிய சீடி ஒன்று வெளியாகி உள்ளது.  அதில் சட்டரீதியாக தாம் எந்த தவறையும் செய்யவி;ல்லை உரிய ஆதாரங்களுடன் விரைவில் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அதுவரை சீடர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று நித்தியானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே சாமியார் நித்தியானந்தா முன்ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அவர் உரிய சட்ட பாதுகாப்போடுதான் வெளியே வருவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 100 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்து பேசினார்.  அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையமும் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

ஓமந்தூர் ராமசாமி செட்டியாருக்கு சொந்த ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் கோரிக்கை விடுத்தார். அதற்கு தன்னால் முயன்ற பணிகளை செய்வதாக கருணாநிதி அறிவித்தார்.
மகளீர் தின வாழ்த்துச்செய்தி அறிவித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரதியின் வாக்கிற்கு இணங்க பெண் அடிமை தீரட்டும், பெண் உரிமை வாழட்டும் என்று வாழ்த்தியுள்ளார். ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றினாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம்.

அதன்படி பாராளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இன்று நிறைவேற்றப்படுகிறது. இதற்கு ஆதவாக அதிமுக எம்பிகள் வாக்களிப்பார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உலக மகளீர் தினத்தின் 100வது ஆண்டு நாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ,; பா.ஜ.க உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மசோதாவை ஆதரிக்கின்றன. சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி நடப்பதாக அவரகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் அரசமைப்பு சட்ட 108வது திருத்த மசோதா என்கிற பெயரில் மகளீர் இடஒதுக்கீடு மசோதாவை விவாதத்திற்காக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று தாக்கல் செய்கிறார். பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்திற்கு பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகி விட்டது. இதனை நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்பு வரவேற்று உள்ளது.
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று : 924 நேற்று: 4847 மொத்தம்: 8953601
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்