மதுரையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்; தனிமூன் அன்சாரி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சீனி முகமது, அப்பாஸ், நூர்முகமது உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. 300-ற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் ரசூல் தலைமையில் பிலால், அலிகான், உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகே மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ரகமத்துல்லா கண்டன உரையாற்றினார். உஸ்மான்கான், நைனார் முகமது, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் புளியங்குடி சுல்தான் உட்பட 300-ற்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு நகரத்தலைவர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மெகராயூதின், அமானுல்லா, ஜாசர் அராபத், நூருள் அமீன், ராமகிருஸ்ணன், முகமது ஆசிக் உட்பட 500-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் இவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். முன்னதாக ஊர்வலம் நடத்தப்பட்டது.
வேலூரில், கஸ்பா பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது முகமது யாசீன் செரீப,; அஸ்லாம் பாஷா தலைமையில் 200-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாசாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் சபீர் அகமது தலைமை தாங்கினார். கலிபுல்லா, நாசர் உசேன், தர்மபுரி சாதிக் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.