Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils
இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.


சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டிய ஆறுமுகம் கலந்துகொண்டு ரூபாய் 16 கோடி மதிப்பிலான மகளீர் சுய உதவிக்குழு சுழல்நிதிகளை வழங்கினார்.

1500 சுய உதவிக்குழுவை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இதில் மாநகர மேயர் ரேகா பிரியதர்சினி, துணைமேயர் பன்னீர்செல்வம், மாநகராட்சி ஆணையர் பழனிச்சாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 7 கிராமங்களுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இதனை வழங்கினார்.  மேலும் அவர் பேசும்போது அரசு கலைக்கல்லூரியும் மூன்று சமத்துவ புரங்களும் தென்னாங்கூர் பகுதியில் அமைய இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் 3500 வண்ண தொலைக்காட்சிப்பெட்டிகள் வழங்கப்பட்டன. இதில் வட்டாச்சியர் கிருஸ்ணவேணி, துணை ஆட்சியர் கல்யாண சுந்தரம், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சிதம்பரத்தில் ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்;சியை சேர்ந்த ராஜாமான்சிங். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் ராஜாமான்சிங் இறந்து போனார். கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கடலூர் மாவட்ட செயலாளர் திருமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவில் பட்டியை சுற்றி உள்ள தோனுகால், லிங்கமபட்டி, மந்தித்தோப்பு கிராமங்களின் மலைப்பகுதிகளில் சரளை மண் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர், விவசாயம் பாதிக்கப்படுகிறது.   சரளை மண் அள்ள அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோயெல், அழகுசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் விநாயகரமேஸ், கணேசன், ராசேந்திரன், எரிமலை வரதன், பால்ராஜ், நகர மன்ற உறுப்பினரகள் தெய்வேந்திரன் மற்றும் பெண்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்கள் குமாரவேலு, ரமேஸ் இருவரும் தங்கள் வேலை நிமித்தமாக  கரூர் சென்றனர். வேலையை முடித்து சொந்த ஊருக்கு திரும்பும்போது இந்தவிபத்து ஏற்பட்டது.  கரூர் வீரராக்கியம் என்ற இடத்தில் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஜல்லி லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் தலைநசுங்கி பலியாகினர். இது குறித்து மாயனூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்ட செயலாயர் இளவழகன், சந்திரகாசி, ரவிச்சந்திரன் மருதைராஜ், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்வேணுகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கரூர் சட்ட மன்ற உறுப்பினர். செந்தில் பாலாஜி தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து சைக்கிள் பேரணியும் நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறுபான்மை கழக செயலாளர் ஜஸ்டீன் செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் குமரகுரு நகர கழக செயலாளர் பாபு உள்ளிட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருப்பூரில் மாநகராட்சி முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னச்சாமி திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசாமி, ஆனந்தன், ராதாகிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவும் 30 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலை கண்காணிக்க இரண்டு ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். சஞ்சை போஸ் ரெட்டி, அகூஜா ஆகியோரது பெயர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார் கோவிலில் முட்டம் மணல்மேடு பகுதிகளை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், சபாராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சீடியை தயாரித்தவர் யார் வெளியிட்டவர் யார் என்பதில் விடை தெரியாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் ஆஸ்ரமத்தின் முக்கிய சீடர் லெனின் சென்னை காவல்துறையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் சீடியை தான் வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து மோசடி, மதஉணர்வை புண்படுத்துதல், சதிக்குற்றம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்படுகிறது.
பாராளுமன்றத்திலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்க வகைசெய்யும் சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.  இது தொடர்பான மசோதா நாளை டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உள்ஒதுக்கீட்டை படிப்படியாக செய்துகொள்ள முடியும.; முதலில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே உள்ஒதுக்கீடு வழங்காமல் மசோதாவை நிறைவேற்ற மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அது சமூக நீதிக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகார பங்களிப்பை மறுப்பது, அந்த பெரும்பான்மை சமுதாயத்தையே புறக்கணிப்பதற்கு ஒப்பாகும் என்று குறை கூறியுள்ளார்.
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   6 பேர் இன்று : 683 நேற்று: 3712 மொத்தம்: 8948513
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்