சென்னையடுத்த ஊரப்பாக்கம் ஒன்றிய ஊராட்சிமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பெருமாள் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
2010-07-29 21:16:08
ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.உறுப்பினர் பெருமாள் வெற்றிபெற்றார். அவர் நேற்று ஊராட்சிமன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் வட்டாட்சியர் சார்தாஜ்பேகம், உதவி தேர்தல் அதிகாரி பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.