சென்னை மாநகரில் பொதுவிநியோக திட்டம் செயல்படுத்தும் அலுவலர்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
2010-07-29 21:10:10
சென்னை கோபாலபுரம் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வணிகர் கழகம் ஆகியவை சார்பில் சென்னை மாநகரில் பொது விநியோக திட்டம் செயல்படுத்தும் அலுவலக பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஏ.வ.வேலு தெரிவிக்கையில், நியாவிலைக்கடைகளை மக்கள் எளிதில் இனம் காணக்கூடிய வகையில் ஒரே வண்ணம் பூசப்பட வேண்டும், கேரளா, கர்நாடகா, ஆந்நிரா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்படடும் பொருட்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.