இந்திய தலைமைத் தேர்தல் புதிய ஆணையராக குரோஷி நியமிக்கப்பட வுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீலிடம் பெற்றப்பட்டுள்ளது.
2010-07-28 04:01:31
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா பதவி வகித்துவருகிறார். இவர் நாளை ஓய்வுபெறுவதையொட்டி புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் தற்போதைய மூத்த தேர்தல் ஆணையராக பணியாற்றும் குரோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீல் பிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் முதல் இஸ்லாமிய தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமை குரோஷிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.