ஈழத்தமிழர் அகதிகள் முகாம்களை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்பிவைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
2010-07-28 04:01:09
இலங்கையில் தமிழர் பகுதிகளின் நிலவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சிறப்பு தூதராக அனுப்பிவைக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான சீத்தாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கவும் இலங்கை அரசின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தமிழர்களின் பிராந்தியங்களுக்கு முழுசுயாட்சி உரிமை வழங்கவும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட அனைத்து கட்சி குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யெச்சூரி கோரிக்கை விடுத்துள்ளார்;.