கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சொத்தை அபகரிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்ணை போலீசார் 14 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாள். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் ரோய் தாமஸ். அன்னம்மாளுடன் அவரது சகோதரர் மேத்யூ. மற்றும் ஜான் தாமசின் சகோதரரின் மருமகள் பீலி. இவரது 1 வயது ... Read More »
முக்கிய செய்திகள்:
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு வெட்டப்பட்ட மரத்தால் கண்ணீர் விடும் சமூக ஆர்வலர் மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு ... Read More »
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தபால் வாக்குகளும், 19, 20, 21 ஆகிய 3 சுற்றுவாக்குகளும் மீண்டும் எண்ணப்படும் என்று அறிவித்துள்ளது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளராக நின்ற இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை என உத்தரவிட்டது. ... Read More »
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம்
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும். இதேபோல் எதிர் திசையில் திருவள்ளுர், அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழிதடத்தில் 2 புறநகர் மின்சார ரயில்களின் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. Read More »
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜ.க.விற்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராம்பூர் மற்றும் படவுன் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். படவுன் தொகுதியில் மாநில அமைச்சர் ஒருவர் அங்கு போட்டியிடும் தனது மகளுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவந்துள்ளது. ... Read More »
புதுச்சேரி – பெங்களுரு இடையிலான ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வாரம் இருமுறை நிறுத்தப்படும்
புதுச்சேரி – பெங்களுரு இடையிலான ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வாரம் இருமுறை நிறுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஹைதராபாத் மற்றும் பெங்களுருவில் இருந்து தினசரி வந்து செல்லும் விமான சேவையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி – பெங்களூர் இடையில் இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை, பராமரிப்பு காரணங்களுக்காக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரி வரும் விமான சேவையில் எந்த மாற்றமும் ... Read More »
என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவி கைது
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா ... Read More »
சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து
சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சீனாவில் சமீப காலமாக ரசாயன ஆலைகளில் விபத்து அதிகரித்துள்ளது. கடந்த ... Read More »
சட்டமன்றத் இடைத்தேர்தலில், போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வருகின்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. வருகின்ற மே- 19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்யிடுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவன், அரவக்குறிச்சி தொகுதியில்; செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் அகல்யா ... Read More »
ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது, கார் மோதி விபத்து – 2 பேர் பலி
ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே புலவனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரை விற்பதற்காக அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஈங்கூர் சென்றுள்ளார். தங்கள் பணி முடிந்து இருவரும் ஊர் திரும்பும் போது, அவர்களது வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த பழனிசாமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் ... Read More »