மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்த விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வனப்பணி அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களைக் கோரியிருந்தார். வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணத்தின் மொத்த மதிப்பு, கருப்புப்பணத்தை மீட்டு இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் ... Read More »
இந்தியா
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்குபதிலடி கொடுக்கப்படும்!
பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் பிரமாண்ட நினைவகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திரமோடி ராணுவம் நவீன மயமாக்கப்படும் என தெரிவித்தார். டெல்லி சாணக்கியபுரி பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அருங்காட்சியகத்தில் பணியில் உயிர் நீத்த 34 ஆயிரத்து 800 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி, காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கான நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை ... Read More »
சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில், ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது மகளிரும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல ஊர்களிலும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி பத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து தரப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை ... Read More »
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், காவலர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். ஸ்ரீநகர் அருகே ஃபதே கதல் பகுதியில் தீவிரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். ... Read More »
டிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
டிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் குளிர்கால கூட்டத்தொடரை தேர்தல் முடிந்த பிறகு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. Read More »
பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய மந்திரி காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ... Read More »
பிரதமரின் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!
பிரதமர் நரேந்திர மோடியின் மனதில், சிறுபான்மையினர், பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே இடம் இல்லை என்றும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலத்தில், 2 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டாத்தியா மாநிலத்தில் உள்ள கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி, வங்கியில் கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய, மிகப்பெரிய தொழிலதிபர்களை மட்டுமே கவனித்ததாகவும், மோடியின் மனதில், சிறுபான்மையினர், பெண்கள், ... Read More »
நாளை சபரிமலையில் நடை திறப்பு! தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை!!
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், கேரள அரசு இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது திருப்திதேசாய் போன்ற பெண் ஆர்வலர்கள் கோவிலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ... Read More »
அவதூறு வழக்கு தொடர்ந்தார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர்!!
பாலியல் புகார் கூறிய பிரியா-ரமணி என்ற பெண் பத்திரிக்கையாளர் மீது, வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மீ-டூ புகார்கள் மூலம், வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் அத்துமீறல் புகார் கூறியிருந்தனர். எம்.ஜே.அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தபோது அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்பட்ட இந்த புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், இட்டுக்கட்டப்பட்டவை என்றும் எம்.ஜே.அக்பர் நேற்று விளக்கமளித்தார். ஆனால், எம்.ஜே.அக்பர் மீது கூறிய ... Read More »
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கலால் வரியையும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியையும் ஓரளவுக்கு குறைத்தபோதும், விலை உயர்வு தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை ... Read More »